சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில் மீலாதுப் பெருவிழா

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
                அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சித்தார் கோட்டை மாநகருக்கு புனிதம் சேர்க்கும்  ''ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில்''
''லஜ்னத்துல் லம்ஆன் மாணவர் மன்றம்'' சார்பில், மீலாதுப் பெருவிழா-  
(16-02-2011) -புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் இனிதே தொடங்கியது. 
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் மௌலானா அல்ஹாஜ் கீழக்கரை ஹுஸைன் அப்துல் கரீம் மன்பஈ ஹழரத் தலைமை தாங்க, மாணவர் ஜியாவுல் ஹக்  திருமறை ஓத, முஹம்மது ரிஷாத், மற்றும் முகம்மதியா பள்ளிகளின் முன்னால் ஆசிரியர் E.M. ஹனீஃபா 
அவர்கள் கீதம் பாட விழா இனிதே துவங்கியது. 
மாணவர் மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஃபைஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். ஆரம்பமாக கல்லூரியின் தாளாலர் மௌலவி அல்ஹாஜ் சுதானா முஹம்மது ஆலிம் 
அரூஸி,ஃபாஜில் ஜமாலிதுவக்கவுரை ஆற்றினார்கள். 
கல்லூரிப் பேராசிரியர்கள், மௌலவி அல்ஹாஜ் செய்யிது அபுத்தாஹிர் ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி, மௌலவி அல்ஹாஜ் ஷைகு நிஜாம் அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ, மௌலவி அல்ஹாஜ் ஷம்சுல் ஹக் ஆலிம் பாகவி, சித்தார் கோட்டை சின்னப் பள்ளி இமாம் மௌலவி ஆரிப் ஆலிம் மஸ்லஹி, ஆகியோர் துவக்க உரையாற்றினார்கள்.
  பனைக்குளம்  மௌலவி அல்ஹாஜ் செய்யிது முஹம்மது மதனி ஆலிம் அரூஸி
கீழக்கரை ஜும்ஆப் பள்ளி கதீப், மௌலானா ஹாஃபிழ் ஜெய்னுல் 
ஆபிதீன் ஆலிம் நூரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

சிறப்பு மிகு விழாவிற்கு,  சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் தாளாலர் பேராசிரியர்  ஹாஜி அப்பாஸ், செயலாளர் ஆசிரியர் இஸ்மாயில்,வாழூர் மௌலவி ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பஈ,  ஆசிரியர் ஜின்னா, அழகன்குளம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஜாஹிர் ஹுஸைன். மற்றும் பலர் இச் சிறப்பான மஜ்லிஸில் திறளாகக் கலந்து கொண்டு, அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர். 

விழாவில் இனிப்புகளும், தேனீரும் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவர் மன்றத் தலைவர் நன்றியுறை வழங்க, கல்லூரி முதல்வரின்  சிறப்பான  துஆ மஜ்லிஸுடன்  மீலாதுப் பெருவிழா இனிதே நிறைவை அடைந்தது. வஸ்ஸலாம்.....

இவண்-
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.




Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு