கோவை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நடத்திய மாபெரும் மீலாது மாநாடு.


பிஸ்மிஹி தஆலா

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும்,பூமான் நபி
(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,நாதாக்களின்
நல்லாசியாலும்,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு
சார்பாக உத்தம நபி (ஸல்)அவர்களின் 1486 வது உதயதின
விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4-30
மணியளவில் கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் அமைந்துள்ள
கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அது சமயம் அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத்
ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும்,மௌலானா,
மௌலவி அல்ஹாஜ், அபுல்அய்தாம், கமருல்உலமா, ஷைகுனா,
கேரள மாநிலம் காந்தபுரம் 
A.P.அபுபக்கர் முஸ்லியார் ஹஜ்ரத் கிப்லா
அவர்கள் ஹுப்பூ ரஸுல் (ஸல்) என்ற 
தலைப்பில் சிறப்புப்பேருரை
வழங்கினார்கள். 

பெங்களூர் தாருல் உலூம் ஸஃபிலுர் ரஷாத்
அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
S.ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சத்தியமார்க்கமும் சமீப
குழப்பங்களும்,என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள்.

மேலும்சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானாமௌலவி அல்ஹாஜ் M.முஹம்மது அபுதாஹிர் ஆலிம் ஃபாஜில்பாகவி ஹஜ்ரத் அவர்கள்  நடைமுறை வாழ்வில் நபி (ஸல்)அவர்கள்,என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
உலமாக்கள்பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் இச்சிறப்பு மிகு மாநாட்டில்அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்ட ஏராளமானோர்கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும்பெற்றுக்கொண்டனர். 

இச்சிறப்புமிகு மாநாடு www.safaresunnah.com
www this-is-truth.blogspot.com ஆகிய இரு சுன்னத் வல் ஜமாஅத்
பேரியக்க இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

மாநாட்டின் இறுதியில் கோழிக்கோடு மார்கஸ் மாணவர்கள்
சங்கத்தின் புனித மிகு கஸீதத்துல் புர்தா மஜ்லிஸும், சிறப்பு
கூட்டு துஆவும் நடைபெற்று, பெருமானாரின் புனித மீலாது
மாநாடு இனிதே நிறைவடைந்தது. வஸ்ஸலாம்.ஆமீன்…..
வெளியீடு;-
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத்
வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
வாழூர் மற்றும் மலேசியக் கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு