சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் கலகம்

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் இமாமாக செயல் பட்டு வரும் திரு.ஷம்சுத்தீன் காஸிமியை ''கிறுக்கன்'' என்று செல்லமாக குறிப்பிடுவது, தமிழக ஆலிம்களின் பழக்கம்
தலையில் அட்டகாசமாக ஒரு துண்டை போட்டுக்கொண்டு,பெரிய மனித தோரணையில் எதையாவது உளறிக்கொட்டுவது,அவனது வாடிக்கை.தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தூண்டுவது,இடஒதுக்கீடு கேட்கக்கூடாது,சாதிவாரி கணக்கெடுப்புக்கு வந்தால் தகவல் சொல்லாதீர்கள் என்பது,(நபி யூசுப்) ஜுலைகா அம்மையாரை 'நடத்தை கெட்ட பெண்மணி'என்பது,ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என அமெரிக்காகாரன் சொன்னதை நம்பி,அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தியது என பரபரப்புக்காக எதையாவது செய்து கொண்டிருப்பது இவனது வழக்கம்.
மக்கா பள்ளிவாசலின் நிர்வாகத்தில் இருக்கும் பலருக்கும்,அந்த பொறுப்பு கிடைப்பதற்கே இவன்தான் காரணம் என்பதால் அவர்கள்''பேசாமடந்தை''களாக இருக்கிறார்கள்.
பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகி,சுன்னத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை அற்றவன் என்பதால் அவன் ஷம்சுத்தின் செய்யும் அத்தனை குழப்பங்களுக்கும்,அலப்பறைகளுக்கும் முழு உடந்தையாக இருக்கிறான்.
ஏன் இவன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்பது புரியாத புதிராக இருக்கிறது.உண்மையில் பல்வேறுபட்ட அமைப்புகளில் பங்கெடுத்து அதிலிருந்தெல்லாம் துறத்தியடிக்கப்பட்ட அவனுக்கு,தற்போது ஆதரவாக இருப்பது திரு பி,ஜே.விடமிருந்து துறத்தியடிக்கப்பட்ட சில குழுவினராவர்.அவர்களை குஷிப்படுத்தினால் தான் காரியம் நடக்கும் என்பதால்,அவன் இவ்வாறு தடாலடியாகப் பேசிக்கொண்டிருகிறான்.
அதனால்... பலரும் 'காஸிமி' என்பதற்குப் பதிலாக ''பொய்யன் விஷமி'' என்று அவனை அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.விஷமத்தனத்தில் திரு பி.ஜே.யின் இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்று போட்டிபோட்டுக்கொண்டு பேசிவருகிறான்.
பாரம்பரியமிக்க ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் இந்த ஷைத்தான் இமாமாக இருக்கும் காரணத்தால்,இவனின் பின்னணியைப் புரியாத சிலர், மீலாது விழாக்களுக்கும்,பிற நிகழ்ச்சிகளுக்கும் அவனை அழைத்து விடுகின்றனர்.அங்கு சென்று இவன் உரையாற்றிய பிறகு ஏற்படுகிற குழப்பங்களைச் சந்திக்கிறபோதுதான் 'அடடா' தவறு செய்து விட்டோமே' என்று ஏற்பாட்டாளர்கள் உணர்கிறார்கள்.
'சுமைக்கு உதாவாது' என்று கழுதையைக் கழற்றி விட்ட வண்ணான், சரி பேச்சுத்துணைக்காவது,கூட வா' என்று அதை மீண்டும் இழுத்துக்கொண்டானாம்.அந்தக் கதையாக தன்னுடைய பழைய மாணவரான ஷைத்தான் ஷம்சுத்தீன் காஸிமியிடமிருந்து இது காறும் விலகியிருந்த சென்னை பூந்த மல்லியில் உள்ள வஹாபிச வழிகேட்டின் கோட்டையான, காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரி,சமீபத்தில் அதன் சுயமுகம் வெளிப்பட்டுவிட்ட நிலையில்,பேச்சுத்துணைக்காக ஷைத்தான் காஸிமியின் உதவியை நாடியிருக்கிறது.இதனால் கிலேசமுற்ற ஷம்சுத்தீன்,கடந்த சில வாரங்களாக கண்டபடி பேசிவருகிறான். அது மக்களிடையே பெரும் முக சுளிப்பையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களைப் பற்றி,தமிழகத்துக்கு அறிமுகம் இல்லாத, தன்னை அமீரே ஷரீஅத் என்று தன்னைத்  தானே சொல்லிக் கொண்டு,ஷரீஅத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் திரு .யாகூப் விஷாரமி பேசுவது மோசடியானது என்பது நிரூபணமாகி வருகிறது.அவர் அஃலா ஹஜ்ரத்தின் ஃபத்வாக்களில் கையாடல்களைப் பற்றிய விபரங்களை,தெளிவான சான்றுகளோடு -மறைந்திருக்கும் மாணிக்கம் செய்த மோசடிகளைப் பாரீர் என பாக்கவிகளின் கூட்டமைப்பான 'லிபாஸ்' வெளிக்கொண்டு வந்திருக்கிறது.இதில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை, தவிர்ப்பதற்காகவே காஷிபுல் ஹுதா,பொய்யன் காஸிமியைக் 'கத்தவிட்டு' வேடிக்கை பார்க்கிறது.
தங்களது தகிடுதத்தங்களை மறைப்பதற்காக,அதைப் பற்றி கேட்க வருகின்றவர்களை 'பரேலவிகள்'என்று முத்திரையிட்டு முடித்துவிடப் பார்ப்பது, கேடு கெட்ட காஷிபுல் ஹுதாவின் வழக்கம்.அதே மைதானத்தில் தற்போது பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியை வழிகெட்ட காஷிபுல் ஹுதா களம் இறக்கியிருக்கிறது.
காஸிமியின் நோக்கம் பரேலவிய்யத்தை விமர்சிப்பது எனில்,அதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது.ஆனால் அவன் ஜும்ஆ உரைகளில் தேவையும் தகுதியும் இல்லாமல்,ஆலிம்களைக் குறைகூறியும், தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியும்,பேசிவருவது, தமிழக ஆலிம்களிடையே பலத்த அதிருப்தியையும்,கோவத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
பொய்யன் ஷம்சுத்தின் காஸிமியின் வெத்து உளறல்களைக்கண்டு பொறுக்க முடியாத மக்கள்,ஜூலை மாதத்தின் இரண்டாவது வார ஜும்ஆவில் அவனை சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர்.அவன் பேசியதற்காண ஆதாரத்தைக்
காட்டாமல்,வக்கணையாக பேசியபோது அவனிடம் கேள்விகேட்டவர்களுக்கும், அவனுக்கும் இடையே பலத்த சப்தம் எழுந்திருக்கிறது.
இதன் பிறகு பொய்யன் காஸிமிக்கு துணைக்கு வந்தவர்கள் யார் தெறியுமா? ஒன்று பட்ட சமுதாயத்தை நாசமாக்கிய நாசவாலிகள்,திரு.எஸ்.பாக்கர் (ஐ.என்.டி.ஜே),திரு.ஹைதர் அலி (தமுமுக) அதுபோல் திரு.எஸ்.என்.சிக்கந்தர் (ஜமாஅத்தே இஸ்லாமி) இவர்களோடு சென்னை காஷிபுல் ஹுதாவும் கைகோர்த்துக்கொண்டிருக்கிறது.
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்களே; அது போல இந்த கலகத்தில் ஒரு நல்லது நடந்தது.திரு.எஸ்.எம்.பாக்கரும்,திரு.ஹைதர் அலியும்,ஜமாஅத்தே இஸ்லாமியினரும்தான் பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியின் புரவலர்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.
ஓர் ஆலிமுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது  என்பதை விசாரிப்பதற்கு,ஆலிம்களின் அமைப்பான ஜமாஅத்துல் உலமா வரவில்லை.ஜமாஅத்துகளின் கூட்டமைப்புகள் வரவில்லை. ஏனென்றால் இவன் ஒரு ஆலிமே கிடையாது.இவனுக்கு ஆலிம்களுக்கு உண்டான எத்தகுதியும் கிடையாது.
மாறாக,சென்னை அரசு தலைமை காஜி,சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவினர்,பொய்யன் ஷம்சுத்தீனுக்கு எதிராக சென்னை மாவட்ட போலிஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.பல மாவட்டங்களிலும்-மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில் காவல்துறையிடம் இது பற்றி புகார் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா,மாவட்ட காவல்துறை ஆணையரிடம் இது குறித்து புகார் தெரிவித்து கடிதம் அளித்த போது, ''இது வரை சுமார் ஏழு மாவட்டங்களிலிருந்து இது போன்ற கடிதங்கள் மாநில காவல்துறைக்கு'' வந்துள்ளதாக செய்தி கிடைத்தது.
பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியின் இத்தனை குழப்பங்களுக்கும் மக்கா பள்ளியின் தற்போதைய கேடு  கெட்ட நிர்வாகம் உடந்தையாக இருக்கிறது .
சுன்னத் ஜமாஅத் பள்ளி ஒன்றின் நிர்வாகிகளாக இருப்பவர்கள்,அதன் எதார்த்தத்தையும்,பழக்க வழக்கங்களையும் பேண வேண்டும்.அது முடியாது எனில்,பொறுப்பிலிருந்து விலகி ஓடிட வேண்டும்.
தங்களை மேதாவிகளாக கருதிக்கொண்டு,பணச்செருக்கில் ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலை ஆக்ரமிக்கும் முயற்சியில் தொடர்ந்து இந்த வழிகேடர்கள் ஈடுபடுவார்கள் எனில்,அது அக்கிரமமானது;அதை எப்படியாவது தடுத்து,இந்த வழிகேடர்களை அழிப்பது தமிழக முஸ்லிம்களின் தார்மீக கடமை...

நன்றி-சமநிலைச் சமுதாய மாத இதழ்


வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு