மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!




எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்
மஸ்ஜித் இந்தியாவில் எதிர் வரும் ஷஅபான் பிறை
15- சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 21-05-2016 
அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று
யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,
திக்ரு மஜ்லிஸும், தஸ்பீஹ் தொழுகையும்,
கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் 
அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது 
ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா ,
மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன் 
ஹழ்ரத் ,மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின்,
சீரிய தலைமையில் நடைபெறும்.

அன்றிரவு முழுவதும் விழித்திரிந்து வணக்கவழிபாடுகளில் 
ஈடுபடுவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் நமது 
மஸ்ஜிது இந்தியா பள்ளிவாசல் நிர்வாகம் முறையாக செய்துள்ளது.


இது போன்று பினாங்கு, மற்றும் மலேசியாவில் உள்ள
பல நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், 
இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின்
அனைத்துப் பகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பாக
நடை பெற இருக்கிறது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில்
அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு,
ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.ஆமீன்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு