Posts

தமிழக அரசின் மீலாது நபி அறிவிப்புகள்!!!

மீலாது நபி விழாவிற்கு1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறையை வழங்கியவர் கலைஞர். பிப்-15- மீலாது நபித்திரு நாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். அற நெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக்கருதி மீலாது நபித் திரு நாளுக்கு 1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப் படுத்தியதை நான் நினைவு கூர்கிறேன். அ.தி.மு.க அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்தது. 2001-ல் ஏற்பட்ட அ.தி.மு.க, அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்ததையும், 2006-ல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மீலாது நபித் திரு நாளுக்கு மறுபடியும் தி.மு.க அரசு விடுமுறை வழங்கி, இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாக திகழ்வதையும் சுட்டிக்காட்டி, மீலாது நபி திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். சென்னையில் முஸ்லிம்கள் அடக்கத்தலத்துக்கு (கபர்ஸ்

இராமநாதபுர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!!!

         பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்  பெருமக்களுக்கு நலத்திட்ட  உதவிகள் ராமநாதபுரம்,பிப்,19;  -ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் (மோதினார்கள்) நலத்திட்ட உதவிகள் பெறலாம் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ; இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்பெருமக்கள், பணியாளர்களுக்கு (மோதினார்களுக்கு)  நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து மரணத்திற்கு ரூ ஒரு லட்சம், விபத்தில் ஊன முற்றோருக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், இயற்கை மரணத்திற்கு 15- ஆயிரமும், ஈமச்சடங்கு செலவிற்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் இவ்வாரிய உறுப்பினர்களின் முதல் இரண்டு வாரிசுகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது. திருமண உதவித்தொகை 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை

தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!

  ஷரீஅத் அறிவிப்பு. அன்புடையீர்!                 அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) ஹிஜ்ரி 1432- ஸஃபர் பிறை 29, (04-02-2011) ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரபீஉ லவ்வல் பிறை தென்பட்டதினால் ஆங்கில மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.  எனவே  எதிர் வரும் (16-02-2011) ஆம் தேதி புதன் கிழமை அன்று மீலாதுந் நபி விழா கொண்டாடப்படும் என்பதை, கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் 05-20-2011 -அன்று தெரிவித்தார்கள். வஸ்ஸலாம்... வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு