Posts

புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும், கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம்  பாகவி & தேவ்பந்தி ஹளரத் மற்றும் துணை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்ஹாஃபிழ் M,நாசீர் அலி உமரி ஆலிம் ஹளரத் M.A ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இது  போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,   இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்  மிகச்  சிறப்பாக நடை பெற்றது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில் பல கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டு, கப்ரு ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர் வஸ்ஸலாம்.. வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.

                                                                      பிஸ்மிஹி தஆலா                                                     அன்புடையீர்!                                                                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நபி ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜிரி 1432-ம் ஆண்டு ஷஅபான் பிறை 9- (11-07-2011) திங்கள்கிழமை காலை 10-30-மணிக்கு    மேல் 12-00- மணிக்குள் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்           அவர்களின் அன்புமகன்                                                      மௌலவி A.R.ஹுஸைன் அஹ்மது மதனீ              ஃபாஜில் மன்பயீ M.A. மணமகனுக்கும்.                                விழுப்புரம், ஹாஜி M.லியாகத் அலி அவர்களின் அன்புமகள்                        L.ஜம்ரூத் பேகம் B.B.A. மணமகளுக்கும்                                                                     இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருச்சி பீம நகர், P.S.S. திருமண மண்டபத்தில் நடை
 லால்பேட்டைஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார்  அரபுக் கல்லூரியின் 67-ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்     பிஸ்மிஹி தஆலா அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஷஅபான் பிறை 8-(10-07-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர்    கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .     J.M.A அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் .                                              .                                      தலைமைவகித்தார்கள் .                                                                                                                                               J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ் A.M. ஜாஃபர் அவர்கள் .   வரவேற்புரையாற்றினார்கள்            . ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி ,  அல்லாமா , ஹாஃபிழ் , காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் .  ஸனது வழங்கினார்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு ப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு