Posts

கோவை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நடத்திய மாபெரும் மீலாது மாநாடு.

பிஸ்மிஹி தஆலா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும்,பூமான் நபி (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,நாதாக்களின் நல்லாசியாலும்,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக உத்தம நபி (ஸல்)அவர்களின் 1486 வது உதயதின விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4-30 மணியளவில் கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் அமைந்துள்ள கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில்  மிகச்சிறப்பாக   நடைபெற்றது. அது சமயம் அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும்,மௌலானா, மௌலவி அல்ஹாஜ், அபுல்அய்தாம், கமருல்உலமா, ஷைகுனா, கேரள மாநிலம் காந்தபுரம்  A.P.அபுபக்கர் முஸ்லியார் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹுப்பூ ரஸுல் (ஸல்) என்ற  தலைப்பில் சிறப்புப்பேருரை வழங்கினார்கள்.  பெங்களூர் தாருல் உலூம் ஸஃபிலுர் ரஷாத் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சத்தியமார்க்கமும் சமீப குழப்பங்களும்,என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். மேலும் சேலம

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

Image
From: Ganimathullah Alim  :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!     முஸல்லியன்!    முஸல்லிமா!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்  இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி  வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்  சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)  அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை  காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில்  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று  இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடை

இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா

Image
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில் உத்தம திருநபியின் உதயதின விழா , இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள் , பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது . இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார் . ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர் . ஈசா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார் . காதர் பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை வழங்கினார் . சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள் . முன்னதாக மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் , பேச்சுப்போட்டி , ஹதீஸ்போட்டி , மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது . வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் . செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு