Posts

மர்ஹும் பாத்திமா பீவி மகளிர் அரபுக்கல்லூரி

                   சித்தார் கோட்டை          பதினைந்தாவது பட்ட மளிப்பு விழா அழைப்பிதழ் அன்புடையீர் !                அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 18 (31-07-2010) சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 7.00 மணியளவில் ( மஃரிபு தொழுகைக்கு பிறகு ) முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் இன்ஷா அல்லாஹ் 15- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது . அவ்வமயம் அறிஞர் பெருமக்கள் சிறப்புரை யாற்றவுள்ளார்கள் . அனைவரும் சிறப்பான விழாவில் கலந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் .                         வஸ்ஸலாம்                          -; நிகழ்ச்சி நிரல் ;-                            தலைமை ;- அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனீ B.sc.  அவர்கள்.                ( தலைவர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா ) முன்னிலை;- அல்ஹாஜ் அகமது இபுறாகீம் ( வட்டம் ) அவர்கள்.                  ( புரவலர் முகம்மதியா பள்ளிகள் )                 ஜனாப்   P. A. S. அப்பாஸ் M.sc.

புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு

                பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்                   .   இரட்சகனான வல்ல அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால். இன்ஷா அல்லாஹ் வருகிற ஷஅபான் மாதம் பிறை 15 (27-07-2010) அன்று ‘’ பராஅத் ’’ இரவாகும் .       பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ‘’ பராஅத் ’’ இரவு மனிதர்கள் அல்லாஹ்  விடத்தில் உயர்வையும் , நன்மதிப்பையும் , அருட் கொடைகளையும் , பெறுவதற்காகவும், தங்களிலே அமைந்துள்ள ஆத்மாக்களை பாவமென்னும் அழுக்குகளை விட்டு நீக்கி , பரிசுத்தமடையச் செய்வதற்காகவும், அருளப்பட்ட புனித இரவே ‘’ பராஅத் ’’  இரவு . மேலும் வல்ல அல்லாஹ் தனது பெருங் கருணையால் மனிதர்களை நரகத்தின் வேதனையை விட்டு நீக்கி , உரிமை விடும் புனித இரவே ‘’ பராஅத் ’’ இரவு . அல்ஹதீஸ் ;- அன்றைய இரவில் மஃரிபிலிருந்து ஸுப்ஹு வரை , வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு ரஹ்மத்துடைய மலக்குகள் முன் வானம் வரை வந்து ‘’ எவரேனும் பிழை பொறுக்கத் தேடுபவர் உண்டா ’’ என்று வினவிய வாறுள்ளார்கள் . அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல் அடியார்களே ! வரவிருக்கும் அப்புனித இரவில் நாம் செய்ய வேண்டிய சிறந்த அமல்களைப் பற்றிய சில குறிப்ப

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ''பராஅத்'' இரவு

Image
             ஜுலை மாதம் 27-ந்தேதி '' பராஅத் '' இரவு கொண்டாட அறிவிப்பு. கீழக்கரை-ஜுலை-17  இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார் , கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது , கடந்த  13-ஆம்தேதி மாலை ஷஅபான் பிறை தென்பட்டதால்  14-ஆம்தேதி  ஷஅபான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக் கப்பட்டுள்ளது. எனவே வருகிற 27-ந்தேதி   பின்னேரம் புதன் இரவு '' பராஅத் '' இரவாக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது நன்றி- தினத்தந்தி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு