Posts

தமிழ் கூறும் நல்லுலகின் ஆலிம்கள் மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு

Image
அரபுக் கல்லூரிகளின் அனுபவமிக்க விற்பனர்கள் பயிற்றுவிப்பால் நடத்தப்படும், தப்ஸீர்,ஹதீஸ் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற இஸ்லாமிய ஒருநாள் பயிற்சி வகுப்புகள். ஒவ்வொரு கலையும் ஒரே நாள் வகுப்பில்..... நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) கலை பயிலரங்கம் நாள் ; 3-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள் மௌலானா அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (தலைமை இமாம்,கரும்புக்கடை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்,கோவை) அகீதா (கொள்கை விளக்கம்) பயிலரங்கம் நாள் ; 10-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள். மௌலானா அ.சையது முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (முதல்வர், ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி,திருவனந்தபுரம்,கேரளா) இஸ்லாமிய சொத்துரிமை (மீராஸ்) பயிலரங்கம் நாள் ; 17-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள். மௌலானா ஏ.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (முதல்வர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்) மௌலானா கே.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் (பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்) வான சாஸ்திர பயிலரங்கம்

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்

Image
இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்ல

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திருமண விழா

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!! சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் அருளாலும், அஞ்ஞான இருள்நீக்கி மெஞ்ஞான ஒளிதந்த, அண்ணல் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நல்லாசியாலும், பனைக்குளம் மகான்  பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் ,வலிமார்கள்,நாதாக்கள்,நல்லோர்கள் துஆபரக்கத்தாலும், ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-09-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு முபாரக்கான வேலையில், சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில், அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகன் தீன்நிறைச்செல்வன் அல்ஹாஜ் S.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அல்ஹாஜ் M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.ஐனுல் மர்லிய்யா ஆகியோரது நிக்கா

நினைவு நாள் அழைப்பிதழ்

Image
                       முதஅவ்விதன் முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன்  வமுஸல்லிமா!!!       பனைக்குளம்            மெய்ஞான மாமேதை , மெய்நிலை கண்ட தவஞானி ,            அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ் ,  அல்லாமா , மலிகுல் உலமா ,            அஷ்ஷெய்குல் காமில் ,  குத்புஸ்ஜமான் ,  மஸீகுல் அனாம்           ஆரிபு பில்லாஹ் ,  ஷெய்குணா ,  செய்யிதி ,  மாமஹான் பாபா        செய்யி து முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்  ( ரலி )                            ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 46-  ஆம் ஆண்டு நினைவு நாள் விழா          நாள்   11-09-2012 செவ்வாய் பின்னேரம். புதன் இரவு 7-00 மணிக்கு     தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி  செய்யப்பட்டு   ஜீரணி வழங்கப்படும். அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வ

Reminder: Chittarkottai Sunnath Jamath invited you to join Facebook...

Image
facebook Chittarkottai Sunnath Jamath wants to be your friend on Facebook. No matter how far away you are from friends and family, Facebook can help you stay connected. Other people have asked to be your friend on Facebook. Accept this invitation to see your previous friend requests Chittarkottai Sunnath Jamath 2142 friends · 259 photos Accept invitation Go to Facebook This message was sent to mastromind.cksunnathjamath@blogger.com . If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please click: unsubscribe . Facebook, Inc. Attention: Department 415 P.O Box 10005 Palo Alto CA 94303

Markazonline

Image
Makazonline http://www.markazonline.com

நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் அரபுக் கல்லூரிகள் துவங்கியது!!!

Image
முதஅவ்விதன்!முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த  ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்     கல்வியை தேடிப் பெறுவது  முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை  என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால்,  முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது  குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல், அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட (மக்தப்) அனுப்பாமல்  உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம்  எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, நரகவாதிகளின் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,     அதிகமான பிரச்சினைகள்     காணப்படுகிறது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை     மார்கக்  கல்வியுடன் உலகக் கல்வியையும்     நமது இஸ்லாமிய  பெற்றோர்கள்     தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு     ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிக

இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
முதஅவ்விதன்முபஸ்மிலன்முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்  மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை  எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே  நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும்  அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய  அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்  இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த  சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்  சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ஷஅபான் பிறை 10 முதல் --ஷஅபான் பிறை 28 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்கள்

முதஅவ்விதன்!முபஸ்மிலன்!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   ஆலிம்களின் சிறப்பு பயிற்சி முகாம் 13-06-2012 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல்  2 மணி வரை சென்னை-இராயபுரம் போலிஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள,ஜெய் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் கூட்டு துஆ,கழாத் தொழுகை,தராவீஹ் தொழுகை,தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை,தொழுகையில் விரல் அசைத்தல்,தொழுகையில் நெஞ்சின்மீது கை கட்டுதல்,பெருநாளில் திடல் தொழுகை,தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லுதல்,பெருநாள் தொழுகையில் தக்பீர் எண்ணிக்கை,பராஅத் இரவு, மேற்கண்ட தலைப்புகளில் நமது நிலைப்பாட்டிற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? வஹ்ஹாபிகள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு எதை சான்றாக காட்டுகிறார்கள்?அவற்றிற்கு நமது தரப்பின் பதில் என்ன? இவைகளை உள்ளடக்கிய புத்தக வடிவிலான ஏடு ஒன்று உலமாப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி MA ஹஜ்ரத் அவர்களால் மிகத் தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.இதி

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் கலகம்

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் இமாமாக செயல் பட்டு வரும் திரு.ஷம்சுத்தீன் காஸிமியை ''கிறுக்கன்'' என்று செல்லமாக குறிப்பிடுவது, தமிழக ஆலிம்களின் பழக்கம் தலையில் அட்டகாசமாக ஒரு துண்டை போட்டுக்கொண்டு,பெரிய மனித தோரணையில் எதையாவது உளறிக்கொட்டுவது,அவனது வாடிக்கை.தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தூண்டுவது,இடஒதுக்கீடு கேட்கக்கூடாது,சாதிவாரி கணக்கெடுப்புக்கு வந்தால் தகவல் சொல்லாதீர்கள் என்பது,(நபி யூசுப்) ஜுலைகா அம்மையாரை 'நடத்தை கெட்ட பெண்மணி'என்பது,ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என அமெரிக்காகாரன் சொன்னதை நம்பி,அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தியது என பரபரப்புக்காக எதையாவது செய்து கொண்டிருப்பது இவனது வழக்கம். மக்கா பள்ளிவாசலின் நிர்வாகத்தில் இருக்கும் பலருக்கும்,அந்த பொறுப்பு கிடைப்பதற்கே இவன்தான் காரணம் என்பதால் அவர்கள்''பேசாமடந்தை''களாக இருக்கிறார்கள். பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகி,சுன்னத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை அற்றவன் என்பதால் அவன் ஷம்சுத்தின் செய்யும் அத்தனை குழப்பங்களுக்கும்,அலப்பறைகளுக் கும் முழு உடந்தையாக இருக்கிறான். ஏ

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

Image
லைலத்துல்   கத்ர்   இரவு   வணக்கம்   பற்றி அண்ணலார்  ( ஸல் )  அவர்கள்   யார்   நன்னம்பிக்கையுடனும் , தூய   நிய்யத்துடனும் , ' ' லைலத்துல்   கத்ர் ''  எனும்   இரவில் விழித்திருந்து   இறை   வணக்கத்திலே   கழிக்கிறாரோ  அவரின்  சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத்   4;  அல்ஹம்து  1  முறை ,  அல்ஹாக்கு முத்தகாதுரு  1  முறை ,  குல்ஹுவல்லாஹு  3  முறை ஓதி   தொழ   வேண்டும் இதன்   பலன் ;  மரண   வேதனை   இலேசாக்கப்படும் , மண்ணரை   வேதனை   குறைக்கப்படும் . (2)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 1  முறை   குல்ஹுவல்லாஹு  27  முறை   ஓதி   தொழ வேண்டும்   இதன்   பலன்   அன்று   பிறந்த   பாலகனைப் போன்று   பாவ   மற்றவராகிறார் (3)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 3  முறை   குல்ஹுவல்லாஹு  50  முறை   ஓதி   தொழ   வேண்டும் . இத்   தொழுகை   முடிந்தவுடன்   ஸஜ்தாவில்  3- ம்   கலிமா   ஒரு   முறை   ஓதிய   பின்   துஆ   கேட்டால்   துஆக்கள்   ஏற்றுக்   கொள்ளப்படுகிறது (4)  இரண்டு   இரண்டாக   

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு