புனிதமிகு மிஃராஜ் இரவு

    பிஸ்மிஹி தஆலா
                                
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1432 ரஜப் பிறை 27 (28-06-2011) செவ்வாய்க்கிழமை பின்னேரம், புதன்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர் மதரஸா நூருல் அமீனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த  அய்யம் பேட்டை ஜாமிஆ மதரஸா சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர், மரியாதைக்குரிய, மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எம். ஜியாவுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே, அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும், மிகத்தெளிவாகவும், பயான் செய்தார்கள். இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடாநாடுகள், மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், புனிதமிகு மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமான நல்லடியார்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும் பெற்றுக்கொண்டார்கள். வஸ்ஸலாம்.ஆமீன்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை


Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு