வாழூரில் ஹிஜ்புல் குர்ஆன் மஜ்லிஸ் துவங்கியது !!!

வாழூர் அல்--மஸ்ஜிதுர் ரைய்யான் சுன்னத் ஜமாஅத் 
ஜும்ஆப் பள்ளிவாசலில்,வலமை போல்,27-05-2017 முதல்
 ( ரமழான் பிறை 1 முதல் )
(ஹிஜ்புல் குர்ஆன்) குர்ஆன் ஓதும் மஜ்லிஸ் துவங்கியது.அல்ஹம்துலில்லாஹ்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டு,ஒரு நாளுக்கு ஒரு ஜுஸ்வு வீதம் 
ஓதி,பிறை 27 லைலத்துல் கத்ர் இரவு அன்று முடிக்கப்படும்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 40 வருடத்திற்கு மேல் 
சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் ஏராளமான முன்னால் இன்னால் மாணவர்கள் கலந்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் பெரியவர்களும், தொடர்ந்து ஓதிவருகிறார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வித சிறப்பையும் வழங்குவானாக ஆமீன்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை, கண்ணியம் வாய்ந்த 
உலமாப் பெருமக்கள் அதிகமானோர் வழிநடத்தி உள்ளார்கள்.
அல்லாஹ் அந்த உலமாப் பெருமக்களுக்கு இரு உலகிலும் 
நற்பதவி வழங்குவானாக ஆமீன்.











யாஅல்லாஹ் இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை,கியாமநாள் 
வரை தொடர்ந்து நடைபெற செய்வாயாக ஆமீன்.

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு