Posts

Showing posts with the label ரம்ஜான் பண்டிகை

நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை

ராமநாதபுரம் , செப் 11 . ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உலக அமைதி , மத நல்லிணக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்தனர் . முஸ்லிம்கள் கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு மேற் கொண்டனர் . நேற்று முன் தினம் மாலை ஷவ்வால்   பிறை தென் பட்டதையடுத்து ரம்ஜான் ( ஈகை திரு நாள் ) கொண்டாட ராமநாதபுர மாவட்ட தமிழ்நாடு அரசு காஜியார் கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி V.V.A ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் முறையான அறிவிப்புச் செய்தார்கள் . இதையடுத்து நேற்று முன் தினம் இரவு தக்பீர் ஓதப்பட்டது . நேற்று காலை 8 முதல் 9 மணிவரை தேவிபட்டினம் , சித்தார் கோட்டை , வாழூர் ,   அத்தியூத்து , புதுவலசை , பனைக்குளம் , ஆற்றங்கரை , உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது . இதில் ஜமாஅத்தார்கள் உள்பட முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று , உலக முஸ்லிம்களிடம் சமாதானமும் , சுக வாழ்வும் , ஏற்பட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு