நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!

27 -06 -2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக! குத்பா பேருரை ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா. நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு. ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல... இறை அச்சமும் இறை வணக்கமும்தான் அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.